விளக்கேற்றி வழிபட்டால் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். தினமும் வீட்டில் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.தீபத்தில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி தேவி உள்ளனர். தீபம் ஏற்றி கடவுள் வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5:30 மணிக்குள் பெண்கள் தலைவாரி அழகு செய்து கொண்டு விளக்கேற்ற தொடங்க வேண்டும்.