ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் டிச.12 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். பிரதோஷத்தை முன்னிட்டு இன்று காலை 6:00 மணி முதல் டிச.12 பகல் 12:00 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கனமழையால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால் அனுமதி மறுக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.