தஞ்சாவூர் பெரிய கோவிலில் விக்ரகங்களுக்கு மாவு காப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2019 12:12
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் சுவாமி விக்ரகங்களுக்கு மாவு காப்பு செலுத்தும் பணிகள் இன்று காலை தொடங்கியது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கும்பாபிஷேகத்துக்கான பாலாலயம் மற்றும் யாகசாலை பந்தல் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கோயில் முழுவதும் உள்ள சுவாமி கற்சிலை விக்ரகங்களுக்கு மாவு காப்பு செலுத்தும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த பணியில் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 50 பெண்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டனர். 450 லிட்டர் தயிர் 200 கிலோ பச்சரிசி மாவு கொண்டு இரண்டையும் ஒன்றாக கலந்து அதனை கற்சிலைகளில் பூசி வைத்தனர் . இரண்டு நாட்கள் கழித்து அதை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் எண்ணை காப்பு செய்ய உள்ளனர் இந்த பணி இன்று தொடங்கியது 15 தினங்களுக்கு தினமும் நடைபெற உள்ளது.இதில் பெரிய கோயில் திருச்சுற்று மாளிகையில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் ராகு கேது சிலைகள் சப்த கன்னிமார்கள் உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை சாத்தும் நிகழ்ச்சி தொடங்கியது.