வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் லட்சதீப விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2019 04:12
வில்லியனூர் : வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு நாளை மாலை 6:00 மணியளவில் லட்சதீப விழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு தீபாராதனை, மாலை 5:30 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு, மாலை 6:00 மணிக்கு லட்சதீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6:20 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலாவை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை உற்சவ தாரர் ஹோட்டல் அக் ஷரதா உரிமையாளர் அன்பு குடும்பத்தினர் மற்றும் கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் ஆகியோர் தலைமையில் சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்து வருகின்றனர்.