பதிவு செய்த நாள்
09
டிச
2019
04:12
சங்ககிரி: சங்ககிரி மலைக்கோட்டை உச்சியிலுள்ள தர்காவில், சந்தன உரூஸ் விழா, நேற்று (டிசம்., 8ல்) கொண்டாடப்பட்டது. அதில், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான இஸ்லாமியர், குடும்பத்தினருடன் வந்து, மலை உச்சிக்கு சென்று, சிறப்பு இறைவழிபாடு நடத்தினர். சங்ககிரி இறைநேசர் நண்பர் குழு சார்பில், மலைக்கோட்டை க்கு சென்றவர்களுக்கு, உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை செய்யப்பட்டதால், வேண்டுதல் வைத்த இஸ்லாமியர், மலையடிவாரத்தில், ஆடு, கோழிகளை பலியிட்டு, அங்கேயே சமைத்து, மக்களுக்கு அன்னதானம் செய்தனர்.