பதிவு செய்த நாள்
09
டிச
2019
04:12
பழைய திருப்பாச்சூர்:திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாச்சூர் பகுதியில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், மஹா கும்பாபிஷேகம் நேற்று 8ம் தேதி, நடந்தது.
முன்னதாக, 6ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, மங்களவாத்தியமும், கரிக்கோலம் கணபதியும், புதிய பிம்பங்கள் கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று 8ம் தேதி, காலை, 7:45 மணிக்கு, கலச புறப்பாடும், காலை, 8:00 மணிக்கு, கோபுர விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 8:30 மணிக்கு, ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இன்று 9ம் தேதி முதல், பகல், 12:00 மணிக்கு, மண்டலாபிஷேகம் நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.