பதிவு செய்த நாள்
09
டிச
2019
04:12
அய்யங்கார்குளம்:காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளம் கிராமத்தில், சங்கரநாராயணர், முருகர், கிருஷ்ணர், நாகதேவதை கோவில் கட்டப்பட்டுள்ளன.
இக்கோவில்களில், நேற்று முன்தினம் 7ம் தேதி, காலை, 5:00 மணிக்கு, விக்ணேஷ்வர பூஜை மற்றும் மாலை, 6:00 மணிக்கு நவக்கிரக பூஜையுடன் கும்பாபிஷேகப் பணிகள் துவங்கின.நேற்று, காலை, 11:00 மணிக்கு கலசப் புறப்பாடு, 11:10 மணிக்கு கலசத்தின் மீது, சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.