பதிவு செய்த நாள்
09
டிச
2019
05:12
காஞ்சிபுரம்:கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து புறப்பட்ட திருக்குடை, நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்தது.
பக்தர்கள் தரிசனம் முடிந்த பின், நேற்று காலை, திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும், சென்னை யில் இருந்து, ஹிந்து ஆன்மிக சேவா சமிதி அறக்கட்டளை சார்பில், திருக்குடை ஊர்வலமாக செல்வது வழக்கம். இந்த திருக்குடை நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரம் வந்தடைந்தது. திருக்குடை கொண்டு செல்லும் வாகனத்தில், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் தரிசனம் முடிந்து, நேற்று காலை, திருக்குடை வாகனம், திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது.