பதிவு செய்த நாள்
14
டிச
2019
11:12
சென்னை: தமிழகத்தில் இருந்து, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, ஆண்டுதோறும், அறநிலையத் துறை சார்பில், தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, தேனி - -குமுளி சாலையில் உள்ள வீரபாண்டி, கவுமாரியம்மன் கோவில், குற்றாலம் அடுத்த புளியரை, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை ஆகிய இடங் களில், தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை- - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள நவக்கரை மலையாள தேவி துர்கா பிராட்டியம்மன் கோவில், பொள்ளாச்சி- - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள ராமநாதபுரம், பத்ரகாளி அம்மன் கோவில் ஆகியவற்றில், புதிய தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்கள், 2020 ஜன., 31 வரை இயங்கும். அவற்றை தொடர்பு கொள்ள, 1800 4251757 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்.