திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2019 06:12
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு திருவிழா நேற்று துவங்கியது.
கோயிலில் உற்ஸவர் தெய்வானை மட்டும் புறப்பாடாகி திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப் பட்டது. அம்மனின்கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசி மூலம் பல்துலக்குதல், மை இட்டு கண்ணாடி பார்த்தநிகழ்ச்சிகள் முடிந்துதீபாராதனை நடந்தது. டிச., 18 வரை இந்நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும்.