உலகத்தை ஆளும் அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் இரண்டாம் நாள் திருவிழாவில் அன்ன வாகனத்திலும், பூத வாகனத்திலும் பவனி வருகின்றனர். இந்தக் காட்சியைக் காணும் பாக்கியம் நமக்கெல் லாம் வாய்த் திருக்கிறது. என்ன புண்ணி யம் செய்தனை நெஞ்சமே என்றுஅருளாளர்கள் இதைத் தான் குறிப்பிட்ட னர். ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. பூதவாகனம் இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலைக் குறிப்பதாகும். அவரவர் செய்த நல்வினை, தீவினைகளால் பிறப்பு ஏற் படுகிறது. பிறந்த ஒவ்வொருவரையும் இன்பதுன்பம், காலம் ஆகிய பூதங்கள் பயமுறுத்துகின்றன. அந்த பூதங்களைஅடக்கி நமக்கு முக்தியளிக்க வருகிறார். சுந்தரேஸ்வரப்பெருமான். மீனாட்சி அன்னவாகனத்தில் பவனி வருகிறாள். அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெள்ளையாய் இருக்கவேண் டும். பாலும் நீரும் கலந்து வைத்தாலும் பாலை மட்டும் அன்னம் பருகும். அதுபோல, நல்லதும் கெட்டதும்கலந்த இவ்வுலகத்தில், நல்லதில் மட்டுமே நம் மனம் செல்ல வேண்டும் என்று அன்னத்தில் பவனி வரும்அன்னை மீனாட்சி நமக்கு எடுத்துரைக்கிறாள். இருவரையும் தரிசிக்க மாசிவீதிகளில் காத்திருப்போம்.