சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளில் சுந்தரேஸ்வரர் கைலாச பர்வதத்திலும், மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர். மனிதன் உயர்ந்த, மூர்க்க, மந்த குணங்களின் கலவையாக இருக்கிறான். மண்,பெண் , பொன் ஆ சைகளில் சிக்கித் தவிக்கிறான். இவற்றில் இருந்து விலகி நல்வாழ்வு பெற மூன்றாம் நாள் விழாவில் அம்மையப்பரைத் தரிசிக்கவேண்டும். கைலாசபர்வதவாகனம் என்பது, ராவணன் கயிலை மலையை தூக்கிப்பிடித்த தோற்றத்தில் இருக்கும். ராவணன் ஆணவத்தின் அடையாளம். சிவனின் இ ருப்பிடம் எ ன் று தெரிந்தும், அவன் ஆணவ த்துடன் கயிலா யமலையை பெயர்க்க முயன்றான். சிவன் தன் காலால் அழுத்தி ராவ ணனை கயிலாயமலையின் கீழே தள்ளினா ர். வலி தாளாத அவன், தன்னை மன்னித்தருளும்படி வேண்ட, இறைவனும் விடுவித்தார். மனிதனும் இவ்வாறே இறைவனை மதியாமல் ஆணவம் கொண்டு அலைகிறான். அந்த ஆணவத்தை அடக்கவே சுந்தரேஸ்வரர் இந்த வாகனத்தில் பவனி வருகிறார். தேவலோகத்தில் இருக்கும் தெய்வப்பசு காமதேனு. அது கேட்ட வரம் தரும். அன்னை மீனாட்சியும் கேட்கும் வரம் தருபவளாக காமதேனு வாகனத்தில் பவனி வருகிறாள். பசுதன்ரத்தத்தை பாலாக்கி உயிர்களுக்கு அளிக்கிறது. அதுபோல, மனிதனும் சுயநலத்தை விடுத்து பொது நலம் பேண வேண்டும் என்பதை இந்த வாகனம் உணர்த்து கிறது. இந்தக் காட்சியைக் காண்பவர்கள் செல்வமெல்லாம் பெற்று சிறப்புடன் வாழ்வர் என்பது ஐதீகம்.