Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 8ம் நாள்: நீயே என்றும் எங்கள் ராணி! 10ம் நாள்: நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்... 10ம் நாள்: நம்பிக்கும் நங்கைக்கும் ...
முதல் பக்கம் » சித்திரைத் திருவிழா!
9ம் நாள்: வீரத்திருமகளின் வெற்றிப்பவனி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
05:04

சித்திரைத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக்விஜயத்தன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் பவனி வருகிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் தமது வீரத்தை நிலைநாட்டுவதற்காக நாலாபுறமும் படையெடுத்துச் செல்வதுவழக்கம். பாண்டியநாட்டின் ராணியான மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர் தடாதகை. இதற்கு மூன்று தனங்களை உடையவள் என்று பொருள். பட்டம் சூட்டியதும் திக்விஜயம் (எட்டு திசைகளுக்கும் செல்லுதல்) புறப்பட்டாள். தேர், யானை,குதிரை, காலாட்படை ஆகிய நாற்படைகளும் ஆயத்தமாயின. வாத்தியங்கள் முழங்க மீனாட்சி தேரில் ஏறினாள். அமைச்சர் சுமதி உடன் சென்றார். மீனாட்சி பூலோகம் முழுவதையும் கைப்பற்றினாள். பின்,அவளது பார்வை விண்ணுலகத்தின் மீது பட்டது.  ஒவ்வொரு திசையிலும் ஆட்சி செய்யும் அஷ்டதிக்பாலகர்களின் மீது போர் தொடுத்தாள். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வென்று வெற்றிவாகை சூடினாள். அதன்பிறகும் விட்டாளா! சிவபெருமான் ஆட்சிபுரியும் கயிலாயத்தையே கைப்பற்ற கிளம்பிவிட்டாள் அந்த வீரராணி. சிவகணங்கள் அவளை எதிர்க்க முடியாமல் திணறி ஓடின. நந்திபகவானாலும் தடுக்க முடியவில்லை. சிவ பெருமானே நேரில் வந்தார். ஒற்றைக்கழல் அணிந்த திருப்பாதமும், பாம்பும், மழு ஏந்திய கரமும், வெண்ணீறும், கற்றைச் செஞ்சடையும்,ஞான அக்னி வீசும் நெற்றிக்கண்ணும் கண்ட மீனாட்சி, அவரை எதிர்கொள்ள முடியாமல் நாணினாள். அந்த சமயத்தில், அம்பிகையின் மார்பில் இருந்த மூன்றாவது தனம் ஒரு கணத்தில் மறைந்தது. நாணம் பிறந்தது. வானில் அசரீரி ஒலித்தது. கொன்றைவார் சடையனான இறைவன் சிவபெருமானே உன் முன் நிற்கிறார். அவரே உனக்கு மணாளன் என்று ஒலித்தது. சிவபெருமானும், நான் மதுரைக்கு வந்து உன்னை மணம் செய்து அருள்வோம் என்று வாக்களித்தார். பூலோகத்தையும் தேவலோகத்தையும் வென்று, இறைவனின் மனதையும் வென்று அதில் இடம்பிடித்த அன்னையை வணங்க பெருமிதத்துடன் புறப்படுவோம்.

 
மேலும் சித்திரைத் திருவிழா! »
temple news
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?: அழகர் மலையில் உற்பத்தியாகும்  நூபுரகங்கை தீர்த்தத்தில் சுதபஸ் என்ற ... மேலும்
 
temple news
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம்நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் பத்தாம்நாளில் மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. திக்விஜயம் ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் எட்டாம்நாள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இறைமாட்சி அதிகாரத்தில், ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் ஏழாம்நாளன்று சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வர வாகனத்திலும், மீனாட்சி யாளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar