பதிவு செய்த நாள்
28
டிச
2019
12:12
யாரையும் குறை சொல்ல விரும்பாத கும்ப ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு 11ம் இடத்தில் இணைந்திருக்கும் குரு,சனி, கேதுவும் சாதகமாக இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பம், தொழில் இரண்டிலும் சாதனை படைப்பீர்கள்.
குடும்ப வாழ்வில் குறுக்கிடும் தடைகளை முறியடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். லாபமோ லாபம், யோகமோ யோகம் என வாழ்வு சிறக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். தேவையனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகளால் குடும்பத்தில் குதூகலம் காண்பீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும்.
பெண்களால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சியடைவர்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். தடைகளை முறியடித்து முன்னேறுவர்.
* வியாபாரிகளுக்கு மறைமுகப் போட்டி தலை தூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பர்.
* தனியார்துறையில் வேலை பார்ப்பவர்கள் வேலையில் திருப்தி காணலாம். பின்தங்கிய நிலை மறையும்.
* ஐ.டி., துறையினர்கள் வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கப் பெறுவர்.
* மருத்துவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங் களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
* ஆசிரியர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சலுகை, கோரிக்கைகள் கேட்டால் கிடைக்கப் பெறுவீர்கள்.
* போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகளை ஆக.31க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன் பிறகு வேலையில் கவனமுடன் இருக்கவும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பொறுப்பு, பாராட்டு, விருது கிடைக்கப் பெறுவர். பொதுநல சேவகர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.
* கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் பன்மடங்கு கிடைக்க பெறுவர்.
* விவசாயிகளுக்கு விளைச்சல் திருப்திகரமாக இருக்கும். சிலர் புதிய சொத்து வாங்கி மகிழ்வர்.
* பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இனி பிற்போக்கான நிலை இருக்காது. சிறப்பான பலன் காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். கெட்டவர்களின் தொடர்பால் சிரமப்பட்டவர்களுக்கு திருந்தும் வாய்ப்பு உண்டாகும்.
சுமாரான பலன்கள்
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. இடமாற்றத்தை காணலாம்.
* வக்கீல்கள் ஆண்டின் இறுதியில் தாங்கள் நடத்தும் வழக்குகளில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
* ஆசிரியர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். இடமாற்றம் ஏற்படலாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7வரை வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் செய்யவும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆகஸ்ட் 31க்கு பிறகு வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். அதிகாரிகளிடம் அனுசரிக்கவும்.
* விவசாயிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். கால்நடை வகையில் செலவு கூடும்.
பரிகாரம்:
● வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
● ராகுவுக்கு நீலநிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் அபிஷேகம்