ஸ்ரீரங்கம் கோயிலில் மருத்துவக் கடவுளான தன்வந்திரி சன்னதி இருக்கிறது. இவரது மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். கைகளில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சி இருக்கிறது. நீண்ட நாளாக நோயால் அவதிப்படுபவர்கள் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். அத்துடன் தினமும் பெருமாளுக்கு நைவேத் யத்துடன் சுக்கு, வெல்லக் கலவை படைக்கப்படுகிறது.