கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை கைசிக ஏகாதசி என்பர். அன்று இரவில் உற்ஸவர் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கும். சுவாமிக்கு அன்றாட பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும் விதமாக இதை செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர்காலம் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிக்கப்படுகிறது.