Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.33 கோடி உண்டியல் காணிக்கை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.33 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் பெருமை

பதிவு செய்த நாள்

13 ஜன
2020
05:01

ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் ஜன.22க்கு பிறகும் சுக்கிரன் பிப்.9க்கு பிறகும் சாதகமான நிலையில் இருந்து நற்பலன் கொடுப்பர். ஜன.22க்கு பிறகு பெண்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். நற்சுகம் கிடைக்கும்.  கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். பிப்.9க்கு பிறகு காரணமற்ற பயம் நீங்கும். பண வரவு கூடும். சொந்த பந்தங்களின் வருகையால் நன்மை காண்பீர்கள்.  

சூரியன் 9ம் இடத்தில் இருப்பதால் சிலரது பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். வீண் விவாதங்களைக் குறைத்து அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம்.


பெண்கள் மாதத் தொடக்கத்தில் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஜன.22க்கு பிறகு வளர்ச்சி காண்பர்.  சகோதர வழியில் பண உதவி கிடைக்கும்  பிள்ளைகளின் செயல்பாடு பெருமை காண்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். பிப்.9க்கு பிறகு. குடும்பத்தில் வளர்ச்சி ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  புத்தாடை, அணிகலன்கள் மனம் போல வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். குருவால் மனதில் தளர்ச்சி, வீண் கவலை ஏற்படலாம்.  பயணத்தின் போது கவனம் தேவை.  பிப்.4க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி என உபாதைகள் குறுக்கிடலாம்.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்கள் ஜன.22க்கு பிறகு பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றலைப் பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
* வியாபாரிகளுக்கு ஜன.22க்கு பிறகு ஆதாயம் அதிகரிக்கும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்த வாய்ப்புண்டு.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஜன.22க்கு பிறகு முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில்  தடை இருக்காது.
* ஐ.டி., துறையினர் பிப்.9க்கு பிறகு கூடுதல் பலன்களை காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் ஜன. 22க்கு பிறகு சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்களுக்கு ஜன.22க்கு பிறகு அதிகாரிகளின் ஆதரவும், அனுசணையும் வந்து சேரும்.
* கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டிகள் முதலியன பிப்.4க்கு பிறகு மறையும்.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் கிடைக்கும். பால்பண்ணை தொழிலில் வளர்ச்சி காண்பர்.
* பள்ளி மாணவர்கள் ஜன.22க்கு பிறகு முன்னேற்ற பாதையில் செல்வர்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்கள் மாதத் தொடக்கத்தில் அனைவரிடமும் எச்சரிக்கையாகப் பழகவும். எதிரி தொல்லை, வீண் அலைச்சல் ஏற்படலாம்.  
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஜன.22வரை  வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் இடமாற்றம் காணலாம்.  
* மருத்துவர்கள் வீண் மனக்கசப்புக்கு ஆளாவர். பணி நிமித்தமாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
* அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். அதே நேரம் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள்  கவனமாக இருக்கவும். வேலையில் பொறுமை தேவை.
* அரசியல்வாதிகள் சிலர் தீயசேர்க்கையால் அவப்பெயரைச் சந்திக்கலாம் கவனம்.
* பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிரிகள் தொல்லை, போட்டிகள் அதிகமிருக்கும்.
* விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். வருமானம் கிடைக்கும்.
* கல்லூரி மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிலர் தீய நட்புக்கு ஆளாகலாம் கவனம்.

பரிகாரம்

* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* செவ்வாயன்று கேது பகவானுக்கு அர்ச்சனை
* ஏகாதசியன்று பெருமாள் தரிசனம்

* நல்ல நாள்  ஜன.18,19,20,21,27,28,29,30,31, பிப்.3,4,5,8,9
* கவன நாள்: ஜன. 22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,7  
* நிறம்: பச்சை,வெள்ளை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar