மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வெற்றி வாய்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2020 05:01
மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் புதன் ஜன.22 வரையும், சுக்கிரன் பிப்.4 வரையும், செவ்வாய் பிப்.9 வரையும் சாதகமான இடத்தில் இருந்து நற்பலன் கொடுப்பர். குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து மாதம் முழுவதும் நற்பலன் தருவார். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். குரு குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க பிப்.9 வரை அனுகூலம் உண்டு.
புதனால் உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் சேரும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். ஜன.22க்கு பிறகு பொல்லாப்பைச் சந்திக்கலாம்.பொறுமையுடன் இருக்கவும், சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். உறவினர் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூரில் தங்க நேரிடும். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று விழிப்புடன் செயல்படவும்.
பெண்களுக்கு ஆடம்பர வசதிகள் பெருகும். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.. சுயதொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஜன.22க்கு பிறகு உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்படலாம். அண்டை வீட்டாரின் தொல்லை ஏற்படும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு குரு தொழில் விருத்தியை அளித்து கொண்டிருக்கிறார். உங்கள் ஆற்றல் மேம்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும் . * வியாபாரிகளுக்கு மறைமுகப் போட்டி மறையும். வாடிக்கையாளர் மத்தியில் இருந்த அதிருப்தி மறையும். * தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். * ஐ.டி., துறையினருக்கு அனுகூல பலன்கள் கிடைக்கும். எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். * மருத்துவர்களுக்கு பணியில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடையிருக்காது. * வக்கீல்களுக்கு பிப். 9-ந் தேதி வரை நல்ல காலகட்டமாக அமையும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும். * ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அவர்கள் தங்களின் கோரிக்கைகளை ஜன.22க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். * போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் வந்து சேரும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். * அரசியல்வாதிகள் பிப்.9 வரை நல்ல பணப்புழக்கத்தில் இருப்பர். தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. * பொதுநல சேவகர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். * கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். * விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதமாக இருக்கும். விளைச்சல் சிறப்பாக இருக்கும். பாசிப்பயறு, துவரை, கொண்டைக்கடலை, மஞ்சள், பழ வகைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். * பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். தேர்வில் மதிப்பெண் உயரும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். * அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்னைகள் குறுக்கிடலாம். * தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஜன. 22க்கு பிறகு வேலையில் நிதானம் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். * போலீஸ், ராணுவத்தில் பணிபுரிவோர் பிப். 9க்கு பிறகு விடாமுயற்சி எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும். * மாணவர்கள் ஜன. 22க்கு பிறகு நட்பு விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.
பரிகாரம்: * தினமும் காலையில் சூரியநமஸ்காரம் * வெள்ளிக்கிழமை நாகதேவதை வழிபாடு * செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு விளக்கு
* நல்ல நாள் * ஜன.15,20,21,22,23,29,30,31 பிப்.1,2,6,7,10,11 * கவன நாள்: ஜன. 24,25,26 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 2,3 * நிறம்: சிவப்பு, மஞ்சள்
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »