கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) அபார ஆற்றல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2020 05:01
கன்னி ராசி அன்பர்களே!
இந்த மாதம் செவ்வாய் பிப்.9 வரையும், புதன் ஜன.22க்கு பிறகும் சாதகமாக நின்று நற்பலன் தருவர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். அக்கம் பக்கத்தினர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. ஜன.22க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். பிரிந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஜன.22க்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். உடல்நிலை அதிருப்தி தரலாம். வியாதி தொல்லை ஏற்படலாம். பிப்.9 க்கு பிறகு வயிறு பிரச்னை வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் தொழில் ரீதியாக பயணம் சென்று ஆதாயத்துடன் திரும்புவர். * வியாபாரிகள் ஆன்மிக மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவர். * தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கும். * அரசு வேலையில் இருப்பவர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். * போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகளை பிப்.9-க்குள் கேட்டு பெறவும். * தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஜன.22க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். வேலைப்பளு குறையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பதவி உயர்வு காண்பர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். * ஐ.டி., துறையினருக்கு இடமாற்ற பீதி அடியோடு மறையும். புதிய பதவி தேடி வரும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். * வக்கீல்களுக்கு ஜன.22க்கு பிறகு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நற்பெயர் உண்டாகும். * அரசியல்வாதிகள் சிறப்பான பலனைக் காண்பர். புதிய பதவி பெற வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். * விவசாயிகள் பாசிப்பயறு, நெல், துவரை, பழவகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் பிப்.9க்குள் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். * பள்ளி மாணவர்கள் ஜன. 22க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சூரியனால் பகைவர் தொல்லை அவ்வப்போது தலை தூக்கும். இருப்பினும் செவ்வாயால் முறியடிப்பர். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் இருப்பது நல்லது. * தரகு,கமிஷன் தொழில் வாடிக்கையாளரை அதிக முயற்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும்.போட்டியாளர்களின் தொல்லைகள் இருக்கும். * மருத்துவர்கள் வேலையில் நிதானம் பின்பற்றவும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம். * ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக உழைக்க நேரிடும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். அதே நேரம் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. * அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு பண விரயம் ஆகலாம். புதிய முயற்சிகளில் தடைகள் வரலாம். * கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் பிப்.4க்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
பரிகாரம்: * தினமும் காலையில் சூரிய வழிபாடு * ஞாயிறன்று ராகுகாலத்தில் பைரவர் தரிசனம் * சனிக்கிழமையில் அனுமனுக்கு துளசி அர்ச்சனை
* நல்ல நாள்: ஜன.16,17,20,21,27,28,29,30,31, பிப். 6,7,8,9,12 * கவன நாள்: பிப்.1,2 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 1,9 * நிறம்: சிவப்பு, பச்சை
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »