பதிவு செய்த நாள்
13
ஜன
2020
05:01
தனுசு ராசி அன்பர்களே!
அதிக உழைப்பும், விடா முயற்சியும் தேவைப்படும் மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம். சுக்கிரனை தவிர மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளன. அதற்காக கவலை கொள்ளத் தேவை இல்லை காரணம் குருவின் அனைத்து பார்வைகளும் மற்றும் சனியின் 5ம் இடத்துப் பார்வையும் சாதகமாக உள்ளன. இதனால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்.
குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சுக்கிரனால் சுகவாழ்வு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிப்.4க்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும்.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் சுக்கிரனால் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும். பிப். 4க்கு பிறகு ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.
பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். சகோதரரால் பண உதவி கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். சூரியனால் கண் தொடர்பான உபாதை வரலாம். பொருள் விரயம் ஏற்படும். செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் பிப்.9க்கு பிறகு மறையும்.
சிறப்பான பலன்கள்
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை பிப்.4க்குள் கேட்டு பெறவும்.
* ஐ.டி., துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
* பொதுநல சேவகர்கள் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர். எதிர்பார்த்த பதவியைப் பெறலாம்
* கலைஞர்கள் நற்பெயரும் புகழும் தொடர்ந்து கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
* பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும் சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளகலாம். கவனம். அதே நேரம் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் படிப்பில் தொய்வு நிலை ஏற்படாது. வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை நல்ல பலன் அளிக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஜன.22க்கு பிறகு எதிரிகளின் இடையூறு அவ்வப்போது ஏற்படும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகள் வாடிக்கையாளரை விடாமுயற்சி எடுத்து தக்கவைக்க வேண்டியதிருக்கும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் கடுமையாக உழைக்க வேண்டியதிருந்தாலும் ஓரளவு வருமானம் கிடைக்கும்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
* மருத்துவர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். .
* வக்கீல்களுக்கு புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் கவலை முதலியன ஜன. 22க்கு பிறகு மறையும்.
* ஆசிரியர்களுக்கு மந்த நிலை, இருப்பிட மாற்றம் ஏற்படலாம்.
* அரசு பணியாளர்களுக்கு இடமாற்றம் ஏற் படலாம். ஜன.22க்கு பிறகு பணிச்சுமையைச் சந்திப்பர். வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு, அலைச்சல் ஏற்பட்டாலும் நிம்மதியுடன் இருப்பர்.
* அரசியல்வாதிகள் பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். காரணமற்ற பயம் ஏற்படலாம்.
* விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். பாசிப்பயறு கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.
* விவசாயிகள் கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது.
பரிகாரம்:
* செவ்வாயன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
* வெள்ளியன்று பசுவுக்கு அகத்திக்கீரை, பழம்
* நல்ல நாள் : ஜன.16,17,18,19,22,23,27,28, பிப்.3,4,5,6,7,12
* கவன நாள்: பிப்.8,9 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்: வெள்ளை, நீலம்