பதிவு செய்த நாள்
14
ஜன
2020
10:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், மார்கழி மாத நிறைவு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலை, மலை முருகன் கோவிலில், மார்கழி மாத விழா குழுவினர் சார்பில், ஒன்பதாம் ஆண்டு தனுர் மாத (மார்கழி) மாத சிறப்பு பூஜை, மார்கழி, ?ம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, 5:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் தொடங்கி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. மார்கழி மாத நிறைவு விழா பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, கலச பூஜை, 108 சங்கு பூஜை, சண்முகா அர்ச்சனை நடந்தது. மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில், பவானி ஆற்றில் இருந்து, பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தக்குடங்களுடன், கலச புறப்பாடு நடந்தது. பின் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மார்கழி மாதம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. செவ்வாய்கிழமையாக இருப்பதால், நேற்றே நிறைவு பூஜை நடந்ததாக, விழா குழுவினர் தெரிவித்தனர்.