Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ... கூடாரை வெல்லும் விழா திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழையசீவரத்தில் பார்வேட்டை வரும் 16ல் வரதராஜர் வீதியுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2020
11:01

பழையசீவரம்: பார்வேட்டை உற்சவத்தையொட்டி, பழையசீவரம் கிராமத்திற்கு, 16ம் தேதி, வரதராஜ பெருமாள் எழுந்தருள்கிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று, பார்வேட்டை உற்சவத்தில், பழையசீவரம் மலைக்கு செல்வார். இதற்காக, நாளை இரவு, 9:30 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.டோல்கேட், திம்மராஜம்பேட்டை, சங்கராபுரம், பழையசீவரம் ஊர்களில் பெருமாள் வீதியுலா சென்று, 16ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, பழையசீவரம் மலைமேல், பெருமாள் எழுந்தருள்வார். அங்கு, திருமஞ்சனம் மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு பின், மாலை, 5:00 மணிக்கு, திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்வார்.அங்கு, சாலவாக்கம், திருமுக்கூடல், பழையசீவரம், காவாந்தண்டலம், காஞ்சி வரதர் உள்ளிட்ட பெருமாள்கள், ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.தொடர்ந்து, வரதராஜ பெருமாள், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம் கிராமங்களின் வழியாக, 17ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, காஞ்சிபுரத்தை அடைகிறார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பார்வேட்டை உற்சவம், காணும் பொங்கலான, 17ம் தேதி நடைபெறுகிறது.அன்று காலை, 8:00 மணிக்கு, கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. பல்வேறு வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன், திம்மசமுத்திரம் திரிபுராந்தகேஸ்வரர் கோவிலில் எழுந்தருள்கிறார்.அங்கு, சுவாமிக்கு, பல வகையான அபிஷேகம் நடைபெறும். இந்த பார்வேட்டை உற்சவத்தை காண, சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வருவர்.அன்று இரவு, 10:00 மணிக்கு, வாண வேடிக்கை முடிந்து, அங்கிருந்து கிளம்பும் ஏகாம்பரநாதர், மீண்டும் காஞ்சிபுரம் வந்தடைகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar