பதிவு செய்த நாள்
14
ஜன
2020
11:01
அன்னுார்:அன்னுார் பெருமாள் கோவிலில், கூடாரை வெல்லும் விழா நேற்று நடந்தது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள், 30 பாடல்கள் அடங்கிய திருப்பாவையை அருளியவர். மார்கழியில், 27 நாட்கள் நோன்பு முடித்து, கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்னும் பாடலை பாடியதும், ஆண்டாளுக்கு திருமால் திருமண வரம் அருளினார்.இந்த நாளில் பெருமாளையும், ஆண்டாளையும் வணங்கினால் வாழ்வில் அனைத்து வளங்களும் சேரும் என்பது ஐதீகம்.அன்னுார் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், நேற்று கூடாரை வெல்லும் விழா நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு, அபிஷேக பூஜையும், பின்னர் அலங்கார பூஜையும் நடந்தன.ஆண்டாளுக்கும், வரதராஜப் பெருமாளுக்கும், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மூலவர் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்னும் பாசுரத்தை பக்தர்கள் பாடினர். திரளானவர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.