பொங்கல் திருநாளை கேரளம் மற்றும் வடமாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். ‘கிராந்தி’ என்ற சொல்லே ‘கராந்தி’ ஆனது. ‘கிராந்தி’ என்பதற்கு மாறுதல் என்பது பொருள். ‘சங்’ என்றால் ‘நல்ல முறையில்’ என பொருள். ‘நல்ல முறையிலான மாற்றம்’ என்பதையே சங்கராந்தி என்கிறோம். சூரியன் மகர ராசியில் நுழையும் நாள் மனித குலதிற்கு நல்ல மாற்றத்தை தரும். இதனால் தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என சூரியனுக்கு பொங்கல் இடுகிறோம். தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாதங்களை உத்திராயண புண்ணிய காலம் என்பர். இதில் சுபநிகழ்ச்சி நடத்துவது சிறப்பு.