கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்றுடன் தனுர்மாத பூஜைகள் நிறைவு பெற்றது. போகி பண்டிகை நாளான நேற்று முன்தினம் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.ஆண்டாள், பெருமாள் உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் கலச அபிஷேகம் நடந்தது. மலர் மாலைகளால் அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். பகவத் பிரார்த்தனை, விஸ்வக்சேனர் வழிபாடு, புண்ணியாக வஜனம், அங்குரார்பணம் பூஜை நடந்தது. பெருமாளுக்கு பூனல் சாற்றியபின் ரக்ஷாபந்தனம் செய்து வைத்தனர். யாகம் பூர்த்தியான பின் மங்கள வாத்தியங்கள் முழங்க ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை மாற்றுதல் செய்து வைத்து, நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசித்தனர். மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாண வைபவத்தை செய்து வைத்தனர்.