சிவபெருமானே பசுவின் சாணத்தில் இருந்து திருநீறு தயாரிக்கும் முறையை சொல்லியுள்ள விபரம் உபநிஷதம் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. சிவனுக்கு திருநீற்றால் அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும் என்று காரண ஆகமம் கூறுகிறது. கூன் பாண்டியனின் வெப்புநோயைப் போக்க ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். இதை படிப்பவர்களிடம் மந்திரமோ, தந்திரமோ எடுபடாது. ஏனென்றால் திருநீறே சிறந்த மந்திரமாகவும், தந்திரமாகவும் விளங்குகிறது என்கிறார் ஞானசம்பந்தர்.