திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த போது, பிருந்தாவனத்தில் பசுக்களை மேய்த்தும், குழலுாதியும் லீலைகள் செய்ததாக பாகவத புராணம் கூறுகிறது. அவரது குழலோசை கேட்டு பசுக்கள் தங்களை மறந்து நின்றன. குழலுாதும் கிருஷ்ணர் சித்திரத்தைப் பார்த்தால் அரிய உண்மை ஒன்றும் விளங்கும். அவரது கால் பூமியில் செங்குத்தாக ஊன்றியிருக்கும். இடது உள்ளங்காலைப் பசு தன் நாவால் சுவைத்தபடி இருக்கும். இதன்மூலம் பாலகிருஷ்ணரின் திருவடியைப் பற்றிக் கொள்வதே பேரானந்தம் என்பதை பசு உணர்த்துகிறது.