Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் ... காணும் பொங்கல்: தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள் காணும் பொங்கல்: தஞ்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரவான் செல்லும் பாதையில் தரையில் படுத்து பக்தர்கள் வேண்டுதல்
எழுத்தின் அளவு:
அரவான் செல்லும் பாதையில் தரையில் படுத்து பக்தர்கள் வேண்டுதல்

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
03:01

அன்னூர்: அன்னூரில் கூத்தாண்டவர் திருவிழா நிறைவு நாளான இன்று பக்தர்கள் தரையில் படுத்து வேண்டுதலை அரவானிடம் சமர்ப்பித்தனர்.

அன்னூரில், கூத்தாண்டவர் திருக்கல்யாண திருவிழா, கடந்த 31ஆம் தேதி துவங்கியது. ஜன. 7ம் தேதி கோவில் முன் கம்பம் நடப்பட்டு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் 14-ஆம் தேதி வரை, தினமும் மாலையில் கம்பம் சுற்றி ஆடுதலும், பூவோடு எடுத்தலும் நடந்தது. 15ம் தேதி அரவானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாவிளக்கு எடுத்தல் நடந்தது. இன்று அதிகாலை 2 மணிக்கு அரண்மனை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதையடுத்து தர்மர் கோவிலிலிருந்து கூத்தாண்டவர் கோவிலுக்கு அம்பு வில் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து அரவான் மற்றும் அனுமார் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தனர். தர்மர் கோயிலில் அரவானுக்கு பாரதம் படித்து காண்பிக்கப்பட்டது. மதியம் களப்பலியாக, அரவான் போருக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கூத்தாண்டவர் கோவிலில் இருந்து துறைமுகம் செல்லும் வரை, செல்லும் வழியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தை பாக்கியம், திருமண வரம் உள்ளிட்ட வேண்டுதலுக்காக அரவான் செல்லும் பாதையில் படுத்து, கூத்தாண்டவரை வேண்டினர் . அம்பையும், அரவாணையும், அனுமனையும், கைகளில் ஏந்திய பக்தர்கள், பாதையில் படுத்திருந்த பெண் பக்தர்களை தாண்டியபடி சென்றனர். பெண் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அரவானிடம் மனமுருகி வேண்டினர். இதையடுத்து அரவான், அன்னூர் சந்தை திடலிலுள்ள துறைமுகத்தில் சேர்க்கப்பட்டார். மாலையில் குன்னத்தூராம்பாளையம் கூத்தாண்டவர் கோயிலில் மறுபூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar