பதிவு செய்த நாள்
17
ஜன
2020
05:01
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் இன்று காணும் பொங்கலையொட்டி, தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்,வெளியில் வரிசையாக நின்ற நிலையில்,தரையில் விரிப்புகள் இல்லாததால் சூடு தாங்க முடியாமல் அவதியடைந்தனர்.
தஞ்சாவூர் பெரியகோவில் பாரமாரிப்பு பணிகளை தொல்லியல்துறையினரும், பூஜைகள் அறநிலையத்துறையினரும் செய்து வருகின்றனர். பெரியகோவிலின் கலையை காணவும், தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும்,பக்தர்களும் வந்து செல்லுகின்றனர். ஆனால் பக்தர்களும், சுற்றுலா பயணிகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்வதில், தொல்லியல்துறையினருக்கும், அறநிலையத்துறையினருக்கும் பணிப்போர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவிலில் தரைவிரிப்பு, குடிநீர், இருக்கைகள் போன்றவற்றை தொல்லியல்துறையினர் தான் செய்ய வேண்டும்.
அறநிலையத்துறையினர் செய்ய கூடாது என அதிகாரிகள் தாங்களுக்காக ஒரு விதியை வகுத்துக்கொண்டு உள்ளனர். இதனால்,இன்று (17ம் தேதி) நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு, தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் வெயிலில் வரிசையில் நின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், கருங்கலில் சூடு தாங்க முடியாமல், பெண்களும், முதியவர்களும் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர். கூட்டம் வரும் நாளில் கூட தரைவிரிப்புகளை அதிகாரிகள் விரித்து வைத்தால் என்ன என புலம்பியப்படி கடும் வெயிலில் அவதிப்பட்டு தரிசனம் செய்தனர்.