திருப்புல்லாணி: ஆதி காலந்தொட்டே மன்னர்களின் அரசவைகளிலும், போர் முழக்க எச்சரிக்கை ஒலியாகவும் முரசு ஒலிக்கப்படுகிறது. முரசு ஒலி எழுப்பி வாசிக்கப்படும் வாத்தியங்கள்கம்பீரமாகவும், தோரணையாகவும் விளங்கும். திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலின் முதல் பிரகார சன்னதியில் பெரிய அளவிலான கொட்டும் முரசு இசைக்கப்படுகிறது.மன்னர்கள் காலத்தில் இசைக்கப்பட்ட தோலால் ஆன இசைக்கருவி இன்றளவும், கோயில் விழாக்களிலும், பூஜை நேரத்தின் துவக்கத்திலும்ஒலிக்கப்பட்டு வருகிறது. திருப்புல்லாணியை சேர்ந்த முரசு ஒலிக்கும் பா.ரமேஷ் 42, கூறியதாவது: எங்களது முன்னோர் மூலம் காலங்காலமாக தோல் கருவியான கொட்டு முரசை அடித்து வருகிறோம். சேதுபதி மன்னர்கள் காலத்தில் இருந்தும், அரசவை கூட்ட நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பறைசாற்றும், அறிவிப்பாக முரசு இருந்து வருகிறது. சமஸ்தான நிர்வாகத்தில் உள்ள கோயில்களில் முரசு ஓசை இசைக்கப்படுகிறது.இது நகரா ஓசை என்றழைக்கப்படுகிறது. திருப்புல்லாணியில் பகல் 11.50 மணிக்கு உச்சி கால பூஜையை தெரிவிப்பதற்காக தொடர்ந்து 5 நிமிடங்கள் மெதுவாக ஆரம்பித்து வேகமாகவும், மிதமாகவும் இரு குச்சிகளால் அடித்து நிறைவு செய்கிறேன், என்றார். தொடர்புக்கு: 94866 94035.