மானாமதுரை: மானாமதுரை பழைய காளையார்கோவில் ரஸ்தா நம்பி நாகம்மாள் கோயிலில்மகரசங்கராந்தி,முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த 7 ந் தேதி காலை 8:30 மணிக்கு நம்பி நாகம்மாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் வைகை ஆற்றிற்கு சென்று தீச்சட்டிகள், சந்தனக்குடம், பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு லலிதா சகஸ்ர நாமம்,சாந்தி துர்க்கா,108 சங்காபிஷேகம் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோவில் பூஜாரி ரவிச்சந்திரன் செய்திருந்தார்.