திண்டுக்கல்: தோய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயில் மற்றும் திண்டுக்கல் கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சுவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களில் அபிஷேகம் செய்து, சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஆறுகால பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர்கோயில் ஆகிய இடங்களிலும் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது.