பதிவு செய்த நாள்
18
ஜன
2020
12:01
மதுரை: மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அலங்கார வழிபாடு, நேற்று 17.1.20 அன்று நடைபெற்றது.
நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது, பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி சந்தனக் காப்பு சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். இன்றைய பூஜைகள் உபயதாரர்கள் கோட்டப்பட்டி திரு.செல்வம், சங்கர், சதீஷ், சரவணன் குடும்பத்தினர்கள், ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.