திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2020 12:01
காரைக்கால்: காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், சனிக்கிழமை மற்றும் பொங்கல் விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்கள் என்பதால் பள்ளி மற்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகாலை முதல் பக்தர்கள் நளன் குளத்தில் குளித்துவிட்டு பின் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். இதனால் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் ராஜகோபுரம்.வரிசை வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார் மேலும் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்திருந்தனர்.