நடுவீரப்பட்டு, : சி.என்.பாளையம் மலையாண்டவர் என்றழைக்கப்படும் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று கரிநாள் திருவிழா நடந்தது.
காலை 11:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா சுப்பரமணியர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி உற்சவர், அனைத்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மகா தீபாராதனையும்நடந்தது. இரவு 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, வீதி உலா நடந்தது. இன்று 18ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் உற்சவர் விநாயகர் தெப்பல் உற்சவம் நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் வைத்திலிங்கம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.