கீழ்பாப்பம்பாடி வேம்பி அம்மன் கோவில் பூபல்லக்கு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2020 08:01
செஞ்சி: கீழ்பாப்பம்பாடி வேம்பி அம்மன் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு பூ பல்லக்கு விழா நடந்தது .
செஞ்சி தாலுக்கா கீழ் பாப்பாம்பாடி வேம்பி அம்மன் கோவிலில் காணும் பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை வேம்பி அம்மன், மாரியம்மன், கங்கை அம்மன், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 4 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டனர். இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வேம்பியம்மன், மாரியம்மன், கங்கை அம்மன், விநாயகர் பூபல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.