விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பகுதியில் பொங்கல் பண்டிகையொட்டி ஆற்றுத்திருவிழா நடந்தது.விக்கிரவாண்டி, கயத்துார், வெட்டுக்காடு பகுதியில் தை மாதம் பொங்கல்பண்டிகையையொட்டி நடந்த ஆற்றுத்திருவிழாவில் விக்கிரவாண்டி முத்து மாரியம்மன், அங்காளம்மன், திருவேங்கடசாமி, கீழக்கொந்தை முத்துமாரியம்மன், பெரிய காலனி பெருமாள், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் ஆற்றுக்கு வந்து தீர்த்தவாரி செய்தனர்.கயத்துார் - வெட்டுக்காடு ஆற்றுத்திருவிழாவில் அப்பகுதியிலுள்ள சுவாமிகள் ஆற்று திருவிழாவில் கலந்து கொண்டு தீர்த்தவாரி செய்தனர. விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் ஆற்றுத்திருவிழாவிற்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.