சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை விநாயகர் கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். இப்பகுதி மக்கள் நல்ல மழை, விவசாயம் செழிக்க வேண்டி, ஆண்டு தோறும் பொங்கலை முன்னிட்டு இக்கோயிலில் பால்குடம் எடுப்பது வழக்கம். நேற்று 32ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். விநாயகர் கோயிலில் துவங்கிய பால்குட உற்ஸவம் திருவள்ளுவர் தெரு, காளியம்மன் கோயில் வழியே முக்கிய வீதிகளை சுற்றி, மீண்டும் விநாயகர் கோயிலில் முடிந்தது. பக்தர்கள் எடுத்து வந்த பாலில் விநாயகருக்கு அபிேஷகம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.