வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை சின்னத்தோப்பு பகுதியில், ஐஸ்வர்ய விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 2 லட்சம் ரூபாய் செலவில், வெள்ளி கவசத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. ஐஸ்வர்ய விநாயகர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.