ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தாயுமானவ சுவாமிகளின் பாடல் முற்றோதுதலும், குருபூஜை விழாவும் நடந்தது. ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் லட்சுமிபுரத்தில் தாயுமானவ சுவாமி தபோவனம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை தை மாதம் விசாக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. ஜன.,17,18 ஆகிய நாட்களில் தாயுமானவர் பாடல் முற்றோதுதலும், நேற்று தாயுமானவர் சுவாமி குருபூஜையும் நடந்தது. குருபூஜையை முன்னிட்டு ஸ்படிக லிங்கத்தின் வாயிலாக தாயுமானவ சுவாமிக்கு அபிஷேகமும், பஜனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும், தனித்தனியாக பூ சாத்தி வணங்குதலும், நடந்தது. மாலையில் ஸ்ரீமத் சுவாமி ஸ்தானந்தர் தலைமையில் ஆன்மிக அறிவுரை நிகழ்த்தப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.