பதிவு செய்த நாள்
20
ஜன
2020
01:01
சென்னை: வேளச்சேரியில், ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி, 28ம் தேதி துவங்குகிறது.
ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவை மையம், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து, ஆண்டுதோறும், கண்காட்சியை நடத்தி வருகின்றன.இதன், 11வது கண்காட்சி, வேளச்சேரி குருநானக் கல்லுாரியில், 28ம் தேதி துவங்குகிறது. பெண்மையைப் போற்றுதல் என்ற மையக் கருத்தின் அடிப்படையில் நடத்தப்படும் கண்காட்சியை மாதா அமிர்தானந்தமயி துவக்கி வைக்கிறார்.வரும், 29ம் தேதி முதல், பிப்., 3ம் தேதி வரை, ஆறு நாட்கள் கண்காட்சி நடத்தப்படுகின்றன.
இதில், வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், ஜீவராசிகளைப் பேணுதல், பெற்றோர் பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை ஊட்டுதல் ஆகிய, ஆறு கருத்துக்களின் அடிப்படையில், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.கண்காட்சி குறித்து பொதுமக்களிடம் விளக்கும் வகையில், முன்னோட்ட நிகழ்வாக, விவேகானந்தர் ரத யாத்திரை, மாரத்தான், நீச்சல், சைக்கிள் போட்டியும் நடத்தப்படவுள்ளன.மேலும், பாரதீய சம்ஸ்கார கானம், பரத முனி சம்ஸ்கார நடனம், விவேகானந்தர் உடை அணிந்த மாணவர்கள் நடை பயணம், யோகாசனம் ஆகியவை நடத்தப்படுகின்றன.