சிலர் ஆண்டவரிடம்,“எனக்கு நல்லதே நடக்க வேண்டும். பணம் பெருக வேண்டும். கார் வாங்க வேண்டும். நிலச்சுவான்தார் ஆக வேண்டும். பத்து பங்களா வேண்டும். அழகான மனைவி வேண்டும், என் கணவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்’’ என பிரார்த்திக்கின்றனர். தான் மட்டுமே வாழ வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. தன்னுடன் சேர்த்து பிறருக்காகவும் வேண்டுபவனின் பிரார்த்தனை மட்டுமே ஆண்டவரால் ஏற்கப்படும்.
“இந்த ஜனங்கள் தங்களின் உதடுகளால் துதிக்கிறார்கள். ஆனால் அவர்களின் இருதயமோ வெகுதுாரத்தில் இருக்கிறது’’ என்கிறார் ஆண்டவர். இனி மேலாவது, ‘‘அனைத்தும் அறிந்த ஆண்டவரே! சரியான நேரத்தில் தர வேண்டியதைத் தாரும். கஷ்டத்தில் இருக்கும் போது துணை நில்லும். நல்வழியில் நடக்க உதவும். சமாதான பாதையில் அழைத்துச் செல்லும். அனைவரையும் ஆசிர்வதியும்’’ என வேண்டுங்கள். இந்த பிரார்த்தனையே ஆண்டவரின் அருகில் நம்மைக் கொண்டு சேர்க்கும்.