நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்த போது வழியில் ஆறு குறுக்கிட்டது. நீரில் பனிக்கட்டிகள் மிதந்தன. ஆற்றைக் கடக்கும் பாலத்தை ரஷ்யர்கள் நொறுக்கியிருந்தனர். இந்நிலையில் நெப்போலியன், ‘ உலகிலேயே சிறந்தது எது?’ எனக் கேட்டார். வீரர்களிடம் இருந்து ‘தியாகம்’ என பதில் வந்தது.
“சரி... இந்த ஆற்றைக் கடக்க வேண்டும். இப்போது நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்ய முன் வருவோர் யார்?’’ எனக் கேட்க பலரும் போட்டியிட்டுக் கொண்டு நின்றனர். “சபாஷ்... அனைவரும் வரிசையாக நீருக்குள் இறங்கி தலை குனிந்து நில்லுங்கள். மூக்கில் நீர் ஏறாத அளவுக்கு மூச்சை சற்று அடக்குங்கள். பனியும், குளிரும் வாட்டும். பொறுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். அவர்களும் ஆற்றில் இறங்கி நின்றதும், நெப்போலியன் உள்ளிட்ட மற்ற வீரர்கள் குதிரைகளுடன் அவர்களின் மீதேறி ஆற்றைக் கடந்தனர். மறுகரைக்கு சென்ற நெப்போலியன் திரும்பி பார்த்த போது, ஆற்றுக்குள் நின்ற யாரும் உயிருடன் இல்லை. பனியோடு பனியாக உறைந்திருந்தனர். இவர்களைப் போல தியாக உணர்வு நமக்கும் இருந்தால் நம் நாட்டுக்கே பெருமை!