“கணவனை இழந்த பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் ஒருவன் பாடுபட வேண்டும். அவன் இறைவனின் வழியில் நடப்பவனுக்கு ஒப்பாவான். அவனை இரவு முழுவதும் தொழுபவனுக்கும், நோன்பு நோற்பவனுக்கும் சமமாக இறைவன் பார்க்கிறான். * ஏழைகளிடம் இரக்கம் கொள்வோர் மீது இறைவன் இரக்கம் கொள்கிறான். * பூமியிலுள்ளோர் மீது இரக்கம் காட்டினால், இறைவன் உங்கள் மீது இரக்கம் கொள்கிறான். * இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடம் அன்பு காட்ட வேண்டியது நம் கடமை.