Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தந்த அலங்காரம்! ஒரே கருவறையில் அரியும் அரனும்...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனலை அகற்றிய ’அருகம்புல்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
03:01

’வாசம் மிக்க மலர் மாலைகள் ஏராளம் இருக்க, விநாயகருக்கு ஏன் அருகம்புல் மாலை  அணிவிக்கப்படுகிறது?’ என்ற எண்ணம் பலருக்கு எழலாம். ’அனலாசுரன்’ என்ற அசுரன்  தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாறித்  தகித்து விடுவான். அவனைக் கண்டு அஞ்சிய பிரம்ம தேவனும், தேவேந்திரனும், சிவபெருமானைச் சந்தித்து முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரிடம், அந்த  அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார்.

விநாயகர் பூத - கணங்களுடன் சென்று, அனலாசுரனுடன் போர் புரிந்தார். அனாலசுரன்  பூத -கணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் பலமாக மோதினார். ஒரு கட்டத்தில் கோபமுற்ற விநாயகர், அனாலாசுரனை அப்படியே விழு ங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான்.  விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.

இதையடுத்து விநாயகருக்கு கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்தப்  பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து,  விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனாலசுரனும் வயி ற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.

அன்று முதல் தன்னை அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமெனவும், அரு கம்புல் மாலை சமர்ப்பித்து வழிபடுமாறும் விநாயகர் கூறினார். இந்த வழக்கம்தான்  இன்றும் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar