பதிவு செய்த நாள்
24
ஜன
2020
10:01
ஐதராபாத், :தெலுங்கானாவில் உள்ள பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ஒருவர், தங்கள் பெருமாளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற, வித்தியாசமான கோரிக்கையை வைத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், சில்கூர் பெருமாள் கோவிலின் தலைமை பட்டாச்சாரியார், தங்கள் பெருமாளுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து, தலைமை பட்டாச்சாரியார் சி.எஸ்.ரங்கராஜன் கூறியதாவது: அனைத்து தெய்வங்களும், மைனராகவே கருதப்படுகின்றனர்.
எனவே, தெய்வங்களை சீராட்டும் நபர்கள் தான், நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். ஆகவே, குடியுரிமை திருத்த சட்டத்தின், கீழ், அனைத்து, கோவில் கடவுள்களுக்கும் குடியுரிமை வழங்கவேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, அண்டை நாடுகளின் சிறுபான்மையினருக்கு, நம் நாட்டின் குடியுரிமை வழங்கப்படுகிறது. என் கடவுளும் சிறுபான்மையினர் தான். ஆகையால், அவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.