பதிவு செய்த நாள்
24
ஜன
2020
02:01
ஆனைமலை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா இன்று, 24ம் தேதி காலை, 9:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்துக்காக, ஆழியாறு ஆற்றுப்படுகையில், காலை, 8:00 மணிக்கு கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பிப்., 6ம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், பிப்., 9ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 11ம் தேதி காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது.