காரைக்கால்: காரைக்கால் தை அமாவாசையை முன்னிட்டு, கடற்கரையில் நித்திய கல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் ஆகிய தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று கடற்கரையில் காலையில் ஏராளமான வர்கள் இறந்த முன்னோர்களுக்கு பிராத்தனை செய்தனர்.பின் அதைத்தொடர்ந்து கடற்கரையில் எழுந்தருளிய நித்திய கல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் ஆகியோர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.தீர்த்தவாரி முடிந்து நித்திய கல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் சுவாமி ஆகியோர் கடல்கரை சாலை.நேருவீதி. மாதாகோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.மேலும் தை அமாவாசையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.