Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி ... முத்துவடுகநாதர் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை முத்துவடுகநாதர் கோயிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சன்னாசிவரத பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
11:01

ஆத்தூர்: தளவாய்ப்பட்டி கிராமத்தில், தை அமாவாசை முன்னிட்டு சன்னாசி வரத பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது. ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில் உள்ள, மலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த, ஸ்ரீஞாலகிரி சன்னாசி வரதன், வேணுகோபால் சுவாமி கோவில்கள் உள்ளன. இங்கு, சித்தராக வாழ்ந்த சன்னாசி வரதன், தை அமாவாசை நாளில் தான், ஜீவசமாதி அடைந்தார். இதையடுத்து, பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்ப்பட்டி, ஓலப்பாடி உள்பட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சன்னாசி வரத பெருமாள், வேணுகோபால் சுவாமிக்கு கோவில் அமைத்து, தை அமாவாசையில் தேர்த்திருவிழாவை நடத்தி வருகின்றனர். தை அமாவாசை நாளான, நேற்று மாலை, 4:00 மணியளவில் சன்னாசி வரதன், வேணுகோபால் சுவாமியின் இரண்டு தேர்களை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி மற்றும் விழாக் குழுவினர், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இரண்டு தேர்களும் பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கரகோஷம் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தன. அப்போது, சன்னாசி வரதன், வேணுகோபால், ராதா, ருக்குமணி, கிருஷ்ணன், சிங்க முக ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar