விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர்.விழுப்புரம் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி பக்த சமாஜம் சார்பில், திருப்பதிக்கு 27ம் ஆண்டு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் துவங்கிய பாதயாத்திரை, வரும் 31ம் தேதி திருப்பதிக்கு சென்றடைகின்றனர். இந்த குழுவினர் வரும் பிப்ரவரி 1ம் தேதி ரதசப்தமியை தரிசனம் செய்ய உள்ளனர்.இந்த பாதயாத்திரையில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சென்றனர்.